Monday, August 17, 2015

நாலு கவிப்பெருமாள் - Blog 15/1.


திருமங்கை மன்னன்-குமுதவல்லி  நாச்சியார் (திருநகரி)

With due apologies to Elders and the Prabanda Gayakas, I give herewith the first half of the 108 Periya Thirumozhi Paasurms in the form of one Paasuram for each Decads, the same commencing and ending with similar Syllables as that of Alwar's Thirumozhi Pathigam. This work no doubt is an overact by an under-dog calling for the sympathy of the Lord with empathy. Let me not elaborate further the usefulness of this work but leave it to the viewers considered judgement and appraisal. 

Please forgive me for any of the errors that may have crept in unintended out of exuberance and poetic frenzy and perhaps due to rhythmic compulsions or otherwise of their meaning, purport or grammar.

Now it is all yours =>

ஆழ்வார் பரிகரம் :

நாலு கவிப்பெருமாள் ! ஆறு பனுவல்கள்
ஏலு புவிப்பெருமாள்! ஐவராம் ! -- தோலா
வழக்கன் !தா ளூதுவான் ! ! நீர்மேல் நடப்பான் !
நிழலில் ஒதுங்குவான் ! சேர்ந்து.


பெரிய திருமந்திரத்தின் பெருமையால் ஆழ்வார் திருமங்கை ஆழ்வார் ஆகிறார் :


வாடிய தம்முயிரை வெய்யிலின் வாங்கி, 
தொடையல்சேர் நாரா யணநாமம் -- கூடிய
நிழலில் உலர்த்தும் கலியனவன் பூந்தாள்
நிழலவையே தஞ்சம் நமக்கு.


வாலி ஒருவன் வலிவாங்கி வானவர்க்குச்  
சிலையதால் கூலிசெய் மாலவன்  -- பொலிந்த
பிரிதிசேர் ஒண்மலை தண்இம யத்து
அருவினை எங்கடைவ தே?


 முற்றத்  தளர்வுற்று மூப்பு முனையாமுன்
சுற்றத் தவர்பால் நீர் கற்றபாசம் -- அற்று
வதரி நெடுமாலை மங்கையார் வேந்தன்
உதவஉறு மாட்சி விசும்பு.


ஏன முனாகி எடுத்த நிலமிசை
தானவன் பொன்றத் தடிந்தவன்   -- ஆனநம்
தாசரதி தோய்வதரி யாச்சிரா மத்து
இசைய இமையவர் ஆம்.


கலையும் கரியும் பரியும் திரியும்
மலையும் உளசா ளக்கிராமம் -- மேலா
நிலவும் சுடரும் இருளுமாய் நிற்றான்
அலமரவன்  நாமம் பிதற்று.


வாணிலா மௌவல் மடந்தையர் போகமே
பேணி வினைப்பயன் ஏதம்வந் -- அணுகலா
வண்ணம் இறைஞ்சும் நிமிசார ணியத்தானைத் 
திண்ணம்! அவ்  வும்பராள்கை உய்த்து.


அங்கண்தீ பொங்க அவுணன்வாள் மங்கவே
அங்கொருநாள் ஆளரியாய் நிற்றதும்  -- சிங்கவேள்
குன்றத்தே!  நம்மனை! நாம்தொழுது ஏற்றுகேன் !
ஒன்றும்தீ தில்லை முயற்று.


கொங்குயர் கோடுடை வேங்கடம் தாமுடை
மங்கை மகிழ்ந்துறை மார்பினன்! -- எங்களீசன் !
எம்பெருமான் நாளும் திளைக்குமிடம் தஞ்சமதா;
இம்மண்ணும் வானுலகும் ஆள்!.


தாய்தந்தை தாரம் கிளைமக்கள் என்னிவர்
வாய்ப்பட்டு என்னே உழன்றேன்!ஊன்  -- நோய்ப்பட்டு
உன்னை மறந்தேன்! தண் வேங்கடவா! நீஎந்தன்
முன்னை அகமில்லாது ஓர்.


கண்ணார் திருவேங் கடம்குடிக் கொள்கோவே!
விண்ணும்இம் மண்ணும் தொழநின்றாய்! -- அண்ணா!
களியானை வல்லான் கலியன் பனுவல்
தெளிவார்! அமரராவர் தாம்!


- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

இரண்டாம் பத்து =>

திருவேங்கடம் - 4/4

வானவர் மாதவர் என்னிவர் புந்தியுள்
ஆன அருக்கன் அமர்வர்தாம்  -- மானவரை
ஆட்கொண்டு போய்விசும் பேற வியற்றுவார்த்   
தாட்கடிமை பூணிடமாம் வான்!


காசையார் மோகவார்த்தை மூவா முயறுவார்
நாசமாக நம்பவைக்க  கள்ளவேடம்  -- கூசமிலாது
ஏலுவார் ஏகுமிடம் எவ்வுள் எனஉழல்வார்க் 
கேலுமிடம் வானுல கே!


திருவல்லிக் கேணி :

விற்தோள் விசயன் தனிப்பாகன்! பூங்கேணி 
பொற்பாவை நாகணை நம்பிரான்! -- கற்றூண்
கரந்தெதிர்ந்தான் என்றிவரும்  நாகவரன் காவப்
துரகம்சீழ்ந் தார்க்குய்ந்தார்  வான்!


அன்றாயர் கோன்குலக் கோதைக்  கொடியொடும்
மென்மலர்ப் பாவையள் தன்னொடும் -- நின்றான்
இருந்தான் கிடந்தார்க் கிடம்நீர் மலையே! 
இரும்மன்னர் ஆகல் அடி!


பாராய துண்ட பரமன் ! படிகடந்து
வேறாய தாளன் !  கரா -- இருகூரா
அதக்கழித்து மல்லை தலசயனம் சேர்ப்பார் !
அகம்முற்ற முன்அரிவர் தாம்.


திருக்கடல் மலை - 2/2 :

நண்ணா அவுணர்தம்  வாணாள்நா ளும்மங்க
பெண்ணாகி வானவர்க்கு வானமுதம் -- ''உண்பித்தான்
தன்னை நினைவார்எம் நாயகரே'' என்றவர்
மன்கலியன் நம்மின் முதல்.


தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமை கண்டு தாய் இறங்கிப் பேசும் பாசுரம் :

திவளும் மதிமுகத்தள் எம்மோய் உனக்காய் 
அவாவும் நனிநல்கி என்பயந்தாள்? -- மேவித் 
திடம்சேர்த் திருவாளா ! நீஇவளை என்செய்
துடன்பாற் றுவையோ வினை?


திரிபுரம்  மூன்று எரித்தானாய் ஆக்கைப் 
புரிகரம் எட்டுடையோய்! நான்முகனார்  --  தேர்வரம்
விஞ்சத் தருவாய்! என்மகள்  யாரிவர் ? என்றஞ்சல்
நெஞ்சத் திடம்வைப்பாய் என்?


சொல்பொருள் தானவையாய் சுவைஒளி நாற்றமுமாய்
நல்லரன்  நான்முகன் நாரணர்க்குச்  -- செல்லிடம்
தென்னவர்  பல்லவன் பார்மேல் பரமேச்சர
விண்ணகர் சூழத் திகழ்ந்து.


மஞ்சாடி  நீர்கொழிப்ப செஞ்சாலி நின்றாடும்
எஞ்சா மறைனூல்நல் வேதியர்க்குத்  -- தஞ்சம்
திருக்கோ வலூர்ஆய மாயனை காரார் 
புறவின் கலியன்வாய்க் காண்.

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

மூன்றாம் பத்து =>


இருந்தண் பழனவரைச் சாரல் மீதுலாவு
காருந்த வந்துதண் காவில் -- நீருந்து
மால்திருவை இந்தி ரபுரத்து ஈசனை
வேல்கலியன் பாடப் பயில்.


ஊன்வாட உண்ணா உயிர்க்காவல் இட்டுமேல்
வான்தேட நும்தவம் ஒன்றியற்ற -- வேண்டாவே !
தில்லை திருச்சித் திரகூடத் தான்கழல்
எல்லைப் படவாழ்வர் தாம்.


வாட மருதம் ஒசிந்தவன்! பொய்கைத்
தடம்புக்கு நாகத்து உச்சிமேல்  -- ஆடுவான்!
தேவர் வணங்கும்தண் சித்திர கூடத்தான் 
மேவலும் சாரா வினை.


ஒருகுறளாய் மூவடி மண்முறையின் வேண்டி
இருநிலம்  முன்ஒடுங்க வாங்கி -- திருவைத்தன்
மார்பில் கலந்தவன் சீராம விண்ணகர்
சேர்வான்  உலகின் தலை. 


வந்தாய்! உனைப்புந்தி யேன்மனத்தே புக்கதற்பின் 
எந்தாய்! இனிப்போகல் என்திறமோ? -- சிந்தியேற்கு
அன்பா! அணியாலி அம்மான் உமக்கிடம்
இன்பா! கலியன் ஒலி!


தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கிக் கூறிய பாசுரம் : திருவாலி - 2/3 :


தூவிரிய பூநுகரும்  தேன்வாய பொன்வண்டே!
மேவித் திரியும் சிறுகுருகே! -- ஏவரி
வெஞ்சிலை யானுக்கு என்நோய் உரைத்திடு !என்
தஞ்சம்வல் லார்க்கீ தடைவு!


கள்வன் கரியான் ஒருகாளை  என்மகளை 
உள்ளித்து தம்மூர் வயலாலி -- கொள்வர்  
கொலோ நேர்? இரும்மையல் மொய்ப்ப அயற்றும்
கொலோ?என் றாகுலமாம் தாய்!


நந்தா மறையாளர் முத்தீ முதிர்வேத
சந்தமெழு நாங்கூர் மணிமாட -- பூங்கோயில்
சென்று  வணங்கு மனத்தராய் தொண்டாள
நன்றுஉல கத்தார் விருந்து !


சலம்கொள் இரணியனைச் சாதித்து, முண்டத் 
தலையும் அரர்க்கவன் சாபம் -- தொலைத்த
பிரான்மேவும்  வைகுந்த விண்ணகரம் நெஞ்சத்து 
கூர விசும்பாளும் பேறு.


திருமடந்தை மண்மடந்தை மண்டி இருபால்
இருப்ப, அகிலமும் வானும் -- அருள்நடத்து 
நாங்கூர் அரிமேய விண்ணகரம் நன்நெஞ்சே!
ஆங்கிறைஞ்ச உத்தமர் ஆம் !
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
நான்காம் பத்து =>


போதமர்ந்த மாது அமிழ்தின் வந்துபுணர்
மாதவனார் நின்ற விடம்நல்  -- வேதியர்கள்
நாங்கூர் திருத்தே வனார்தொகையே! கைகூம்ப
ஆங்கு இமையா திருப்பு.


கம்ப களிரட் டவன்! ஒருங்கு  மல்லரை 
வெம்மக் கஞ்சனைக்  காய்ந்தவன்!-- உம்பர்கோன்!
வண்புரு டோத்தமம் தலைசேர்ப்பத் திண்ணியதாம் 
விண்ணவ ரோடின்பக் கூட்டு.


பேரா யிரம்முடைப் புண்ணியன் எம்பிரான்
பேரரு ளாளன் பொலியும்ஊர்   -- சீராரும்
செம்பொன்செய் கோயிலதில் கார்முகிலைக் கண்டுகொண்டு
நம்பவல்லார் மாட்டே மகிழ்வு.


மாற்றரசர் தேசும் திறலும் மணிமுடியும்
நூற்றுவரும் மங்கநீள் பாரதம்கை -- ஆற்றிய 
செங்கண்மால் சேரும் திருத்தெற்றி அம்பலத்து
எங்கோமான் ஏற்றத் திகழ்ந்து.


தூம்பு பனைக்கைத் துவள துதித்துநீள் 
காம்பு மலர்க்கொண்டு வேழமெழ -- பூம்புனல்
தடத்திடை ஏகிய தேவா! திருமணிக்
கூடமிட மாகல் விளம்பு!


தாவி உலகனைத்தும்  தன்னதாக்கி மற்றாங்கு
மேவினை விண்ணவர் விண்ணப்பம் -- ஏவலாய் !
நாங்கையுள் காவளம் பாடிஎம் கோபாலர்  !
பூங்கழல் தாழல் பொலிவு!


கண்ணார் கடல்ஆடை காசினிக் குள்ளயான்
அண்ணா! உனக்கடியேன் என்வினைத்தீர் -- வண்ணம்
திருநின்ற நீயும்,அவ்  வெள்ளக் குளமும்
பொருளாக்க வல்லையோ தாம்?


கவளயானை சென்றடர்த்த காளையே என்னும்!
பவளமேனி ஒர்பார்த்தன் பள்ளித்  -- தேவதேவன்
என்னும்! எனக்குடை இன்பனென்னும்! ஏழைஎன்
பெண்ணிவள் இன்பத் துய்த்து!

நும்மைத் தொழுதோம் ! நும்பணிசெய் நும்மடியோம்!
எம்மைக் கணிசியாது இங்கயர்த்தோம்! -- எம்பெருமான்!
நாங்களினி உய்ய  நினைவராகின் இந்தளூரீர்!
தேங்காதே காட்டீர்ஆ வல்!


திருவெள்ளியங்குடி : 


ஆய்ச்சியர் வெண்ணை நனிநச்சி ஆய்க்குலத்தார் 
காய்ச்சின பால்தயி ருண்டாயால்  -- காய்சின
வேலை அரக்கர்தம் சேனை கூற்றிடைசேர் 
கோலவில்லிக் காள்இவ் வுலகு.

------------------------------------------------------------------------------------

ஐதாம்பத்து =>


அரிவ தறிவான் அடியார் வினைபாழ்
அறுக்கும் வழிதன்னால்! மேவா --  அரக்கர்
குடிபாழ்த்த  வல்வில் இராமவனூர் பூதம்
குடிவாழ்த்த  நில்லாத் துயர்.


தாம்தம் பெருமை அறியான் ! அருமறையும்
தாம்அவன் கீர்த்தி அளப்பறியான்! -- தாம்தாழ
தேவர்க் கருள்செய்  பெருமான்ஊர்க் கூடலூர்
மேவ அகம்அற்றுப் போம்!


வென்றியே வேண்டி அமரர்த் தொழுதெழ
நன்று  அமுதம் கடைந்தளிப்ப -- முன்சென்று
நின்றனை! தண்டா மரைக்கண்ண ! வெள்ளறை க்கு
நின்றாய்! இமையோர் தலை!

உந்திமேல் நான்முகனை முன்படைத்த சேயன்காண் !
அந்திபோல் ஆடை அணிமாயன்! -- எந்தைபிரான்!
சேணுயரும் செவ்வல்லித் செய்புணர்த்த தென்னரங்கம்
பேணுவார்க்கு வானவரும் ஆள் !


தாய்ப் பாசுரம் : திருவரங்கம் 2/5 :


வெருவாதான் என்றன்றே வாய்வெருவும் எம்சேய் 
திருவாளன் செய்தனகள் நோயே -- நிறைவழிப்ப
தான்மதியாள் தாய்ச்சொல் மருந்தாக நங்கைமீர் !
பான்மதியாள் என்மகள் தான் !

கைம்மா மழகளிறு  காக்கக் கலுழன்மேல்
மொய்ம்மா மனத்தனனாய் முந்துற -- எய்திட்டு
செய்தவத்த தாம்பயன் ஆளன் அரங்கன்பால் 
உய்தவர்க்கு சாரா வினை.

பண்டே பெருக்கிய நீரொடு நித்திலமும்
அண்டமும் யாவும் வயிற்றிடை -- மண்ட,தன்
வாயுள்ளே  பெய்த அரட்டன் அரங்கனுக்
காயுள்ளார் பற்று அறும்.

ஏழையேன் ஏதிலேன் எம்மா ! எனதாவி
கூழைநாய் அற்றேநின் பால்குழையும் -- மோழை
எடுத்து முகில்மழை காத்தாய் அரங்கா!
தடுத்தாள் எமைப்பைய வே!


கையிலங்கு ஆழி மிளிர்சங்கம்!  நீள்வரைபோல்
மெய்யிலங்கு மேகலையும் பூவினாள்  -- வைகும்
மருவிருந்த மார்பன் அணிதிருப்பேர் அப்பன் 
கருத்திருந்தார் கூடும் விசும்பு.

தீதுற நின்ற வசுரர் பொருசமர்காம்
போது அவர்க்கு இறையவரும் -- மீதுற
முந்த, நெறுநெறு என்றழல் செய் நாதனவன்
நந்திபுர விண்ண கரே !


ஆழ்வாருக்கு அபிநந்தனம் :

கல்லார் திரள்தோள் மங்கைமன் வாட்கலியன்!
வெல்போர் களியானை வல்லான்! -- தொல்சீர்
வயல்மங்கை ஆலி அருள்மாரி! ஒன்னலர்
சீயம்! குமுதத்தாள் துணை!

-----------------------------------------------------------------------Cont...d/Next Blog
















Friday, July 31, 2015

நாலுகவிப் பெருமாள் -- Blog 15/2.

-----------------------------------------------------Cont.....d/From Blog 15/1.
With due apologies to Elders and the Prabanda Gayakas, I give herewith the second and concluding half of the 108 Periya Thirumozhi Paasurms in the form of one Paasuram for each Decads, the same commencing and ending with similar Syllables as that of Alwar's Thirumozhi Pathigam. This work no doubt is an overact by an under-dog calling for the sympathy of the Lord with empathy. Let me not elaborate further the usefulness of this work but leave it to the viewers considered judgement and appraisal. 

The 1st half was published in my previous Block-15/1 and has to be read with this for a full and concise rendering of the same.

Please forgive me for any of the errors that may have crept in unintended out of exuberance and poetic frenzy and perhaps due to rhythmic compulsions or otherwise of their meaning, purport or grammar.

With obeisance, 
கி.ஸ்ரீ.ஸ்ரீ.

---------------------------------------------------------------------------------------------------------------------

ஆறாம் பத்து =>

நாலு கவிப்பெருமாள் ஆறு பனுவல்சேர்ந் 
ஆலு மறைப்பொருள் ஐந்ததும் -- மாலே!
அறம்பொருள் இன்பப் பயன்வீடு பேறு !
பெறும்அவன் தொண்டர் மடுத்து.


வண்டுண்ணு  தேன்மலர்த் தார்புரள வானவர்க்காய்
அண்ணல்செய் தாங்கமுதம் நீடலும், நின்  -- கண்வரு
பெண்ணமுது கொண்டவனே ! விண்ணகராய்! வேண்டேனிம்
மண்வாழ்க்கை நின்பால் மருவு!


பொறுப்பாய்! வெகுளாது ஐபுலன்கட் ஆளாய்  
மறந்து மனைமக்கள் என்று -- இருந்தேனாய்
இன்றறிந்தேன் நின்னடைந்தேன் விண்ணகர் மேயவனே!
உன்அருள்வாள் கொண்டுவீயக் கூட்டு.



துறப்பேனும் அல்லேன் மதிமுகத்து நல்லார்
மறப்பேனும் அல்லேன், இனிப்போய் -- பிறப்பிறப்பு 
வெல்வேனும் அல்லேன்! திருவிண் நகராய்சொல்!
அல்லல் நில்லா வகை.



கண்ணினார் கொய்வலை வீழ இருந்தேற்கு
நுண்ணிடையார் வாசல் அடைத்து, என் -- எண்ணினீர்
ஏகும் எனஇகழா முன்னம் தொழவேக
மேகும் நறையூரா ரே!


கலங்க நூற்றுவர் துற்றிவிறல் வீரர்
மலங்க விசயற்காய் தேர்துறந்து  -- கோலங்கை
ஆழிகொடுஆழி மறைத்தான் அணிதுளப
வெழில்நறை யூர்த்திரு மாலே!


அம்பரமும் ஆழ்கடல் ஏழ்உல கேழவையும் 
செம்பரத்த தோர்திசைகள் எட்டும்உன் -- பொன்வயிற்றில்
எம்பரத்த தோ?சொல்! நறையூர் மணிமாடம்
நம்பரத்த வோ?தக்கோய் கூறு.


ஆளாய் பணிசெய்  அணிநீர்ச் சடையோன்தான்
நாளும் குறைஇரப்ப பிச்சையூண்  -- மீள
அகல்மார்வ வாசநீர் உகந்தளிப்பான்! நம்பீ!
புகலென வானவர்க்காம் வாழ்வு!


மான்தோல் புரிநூல்  அணிதிரு மார்பினன்!
தேன்துழாய் மாலைஆள்  தோளினன்!  --  காண்டுமென
காட்டும் நறையூர்க்கே ! அக்கலியன் வாய்ப்பனுவல்
கூட்டும்புத் தேளிர்க்கப் பால்!


பெடையோடு அன்னம் நடைபயிலும் பொன்னித் 
தடமுடைச்  சோலைத் திருநறையூர் -- மாடக்
கொடிமிக மின்னி நுமைஅழைப்ப நம்பி!
அடியே  முடிபடநும்  வாழ்வு!


கிடந்தான் இடந்தான் நடந்தான் அடைந்தேற்
கிடம்மணிமுத் தாற்று நறையூர்  -- நெடுமாலே!
நாவில் நமோநா ராயணா என்றோவ
மேவா துயர்பாவம் வீய்ந்து !

------------------------------------------------------------------------------

ஏழாம் பத்து =>

கறவா மடநாகு தன்கன்று உள்ளும்  
உறவதுபோல்  உம்மை நறையூர்க்  -- கிறைவா!
மறவாமை நீஅருளல் வேண்டும்! இனியாம்  
பிறத்தல்போல் இல்லை துயர்.


புள்ஏனம் என்றாய பல்பிறவி மேனியாய்!
உள்ளேன்என் உள்ளத்தின் உள்ளேநீ -- மெள்ளப்
புகுந்ததற்பின் போகலொட்டேன்!  நம்பீ! நறையூர்
உகந்ததற்பின் வாழும்  அயல்?


சினவில் செருகளத்து வாளரக்கர் வீழ்த்த
தனிவில் ஒருவன்! தமியன் -- மனம்கொண்ட
மைந்தன் ! நறையூர்க்காய் என்னை அருள்நினைந்து
உய்ந்தமை நில்லுமே   நீர்!


கண்சோர நீரசும்பி மால்காதல் மெய்புலர்த்த
தண்சேறை எம்பருமான் தாள்சேர்ந்தார் -- கண்ணாரக்
கண்டுருகி கையாரத் நாம்தொழுது ஏத்துவாம்
தொண்டீர் ! எதிர்சூழ நின்று.


தந்தைகால் தாளவிழ வந்தனாய் மாடுநின்று
எந்தன் மனத்தே எழுந்தருளி -- அங்கம்
மெலிவெய்த மீண்டானூர்  அம்ம! அழுந்தூர்
வலியநில் லாஎன் மனம்.


சிங்கமாய்ச்  சீரிச் சிவந்து  அவுணனாவி
மங்க அழல்வைத் தவன், மகற்கு --  அங்கமலக்
கண்ணாய்  இருக்கும் , திருவழுந்தூர் கோசகன்நம் 
எண்ணம்  முழுதாளு வான்!


திருவுக்கும் செல்வமோங்கு செல்வா! காந்தள்
கருமுகைப் போல்மைய கண்ணா! -- உருவுநல்லாய்!
ஐவர்என் மேவிக் குமைப்ப அழுந்தூர்மேல்
செய்வதிசைந்  தாய்என் மகிழ்ந்து?


செங்கமல நாண்மலர்மேல் வண்டினங்கள் வந்துமோத
செங்கழனிச் சேலுகளும் செல்வச்சீர் -- ஓங்கு
அணியழுந்தூர் நின்ற அமரர்கோன் ஏற்றிப்
பணியவல்லீர் உம்பராவர் தாம்.


பெரும்புறத்த தோர்கடலை! பத்தர்தம் ஆவிக் 
கொருத்தனை ! நித்திலத் தொத்தினை! -- தாருகளும்
கண்ணமங்கை கண்ணனை!  வேட்கையால் சொன்னபாடல்
திண்ணமவன் கற்பவையே தான்?

-----------------------------------------------------------------------------------------

எட்டாம் பத்து =>

தலைமகனிடத்து ஈடுபட்ட தலைமகளது செயல் கண்ட தாய் வியந்து கூறிய பாசுரம் :

சிலைதண்டு திண்படை ஆழிபோல்  சங்கும் 
நிலைகொண்ட தாமிவர்க்கு என்று -- அலவலம் 
பெண்ணிவள்  கண்ண புரத்து அம்மானைக் 
கண்டாள் கொலோ? தக்கோ ரே !


தலைவியின் நிலை கண்ட தாய் தலைமனின் இயல்பைப்பழித்தும், தலைமகளது இளமைக்கு இரங்கியும் கூறிய பாசுரம் :


தெள்ளியீர்! தொண்டுதாம் நின்னடிக்கு என்றுதான் 
உள்ளினாள் ! ஊணுறக்கம் காண்கிலாள்! -- கொள்கிடாது
எள்கினீர் ஏணிலீர்? எம்மான் இளமைக்கு
ஒள்குவீ ர் இஃதுஅடுமோ நீடு!


தலைமகனைப் பிரிந்த தலைவி அறத்தொடு நின்றமைக்கு இரங்கிக் கூறிய பாசுரம் :

 கரைஎடுத்த வெண்சங்கு நின்கை கிடப்ப
முறையாமோ எம்மிரு கைசங்கும்  -- நேரா
திழந்தேற்கு கண்ண புரத்துறையும் அம்ம !
வழக்கிது,எம் பால்நண்ணா வே!


தலைமகனிடத்து ஈடுபட்ட தலைவி ஆற்றாது தும்பியை நோக்கிக் கூறிய பாசுரம் :


விண்ணவர் தம்பெருமான்! வேத முதல்வன்!எம்
கண்ணரவர்! கண்ணபுரம் ஒன்றுடையார்  -- என்னுமிவள்
எண்ணம் பிழையாமே  வண்ண நறுந்துழாய்
கொண்டுஊ தாய்கோல்தும் பீ!


தலைவனைப் பிரிந்த தலைவி அந்திப் பொழுதில் தலைவன் வாராது தாழ்த்த, தென்றல் முதலியவற்றால் வருந்தியமைக் கூறல் :


தந்தைதாய் காலில் விலங்கற தோன்றியவன் வாரானால்
வந்துஎமை வாதைசெய் மாருதமே! -- அந்தியில்எம் 
சிந்தைநோய்  ஆகுலம்தான் தெரிவையள் நின்புலம்ப
முந்தி அவர்கூடத் தோன்று.  



தொண்டீர்!நம் மேல்வினைகள் வாரா! நெடுமாட
கண்ண புரத்து அடிகள்பால் -- எண்ணம்
அகலாது  நாம்தொழ தெய்வத் திருமா
மகளால் அருள்நடத்த வாழ்ந்து.


வியமுடை நாகத் தரிதுயில் ஆழ்ந்தான்!
படமுடை நாகம் நடம்பயிலத்  -- தூயநீர்த்
தடமுடை அக்கடம்பின் கண்இடர்ந்தா னுக்கிடம்
யாமுடைக் கணபுரமாம் இல்.


வானோர் மலங்க நெடுவெள்ளம் கொண்டகாலம்
ஏனமாய்ப் பார்மடந்தை நேர்துயர் -- தானே
எயிற்றிடந்து தீர்த்தான் கணபுரம்  சேர்ந்து
பயிற்றும் பௌவம்பொய்யா வே! 


கைமா இடர்தீர்த்த கண்ணறா ! கண்ணபுரம் 
மொய்மா மனத்துடை நின்னடியேன் -- உய்மோ
இனிஒரு வர்க்கு? பிறவாமைக் கூட்டே!    
இனிமறு தலைப்பதில்லா நாடு.


வண்டார்பூஞ் சோலைப்புறவின் மங்கையார் மன்னன்சொல் 
கண்ணபுரத் ஐய!கேள்! மற்றுமோர் -- கொண்டாடுத் 
தெய்வம் உளதாய் இருப்பாரை ஒத்திலேம்உன் 
மெய்த்தொண்டர்க் காகல்  அறிவு.


------------------------------------------------------------------------------------------------------

ஒன்பதாம் பத்து =>

வங்கமா முன்நீர் தடத்ததாயின் ஊறா
தெங்கும் கிணறு! திருக்கண்ணன் - அம்குடியுள்
காயா மகிழம்! உறங்காப்  புளி!வழக்கும்
தேரா வறுமை இலை!


தலைவனது உருவவெளிப்பாடு கண்ட தலைவி தோழிக்குக் கூறிய பாசுரம் :


பொன்னிவர் மேனி ! பெரிதும் இளையர்! என்
மென்நெஞ்சம் நின்று அகலாதார்! -- என்தோழி!
அச்சோ! அழகியார் நாகை எழிலார்க்கு 
எச்சப் படாதோ மகிழ்வு ?


தலைவனிப் பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிய பாசுரம் : 


தன்னை அளித்தேற்கு பேதை நினைப்பிரியேன்
என்றெழிலாப்  பேசி மறந்தார்  -- நன்று
அதுதாரான் ஆகிலும் நாம்தொழுதும் தோழி!
எதுக்கவன் வாரானோ வைகு ?


பிரிவாற்றாத் தலைவி பறவைகளை தூது விட்ட பாசுரம் :


காவார்மேல் மாலாகி பொன்பயந்தேன்! புள்ளினங்காள்!
மேவார் அவர்க்குஎன் சிந்தைநோய் -- ஓவுமினே!
மெய்போலும் பொய்வல்லார்  எம்பெருமான் புல்லாணி
செய்தனவை ஓம்பினனே! முன்.


தலைவி தனது தலைமகன் உள்ளவிடத்தில் தன்னைக் கொண்டு விடும்படி 
உற்றாரை வேன்டும் பாசுரம் :


தவள  நெடும்தடம்தோள் மார்வர்க்கு என்றன்
ஆவி அளவும் அணைஆம்பல் -- பூங்கையர் 
ஏவலம் காட்டிங்கு எய்திடாமுன் உய்த்திடுமின்
ஆவல்  குறுங்குடிக்கே ஏய்ந்து.


அக்கும் புலித்தோல் அரைகிசைந்து மங்கையாள் 
பக்கம் ஒலிந்த சிவனாரும் -- மிக்கப்
பரவும் குறுங்குடிக்கு தூய்நீர் விரைபூ
விரவித் தொழப்பாவம் போம்.

 
தந்தைதாய் சுற்றம் இவைமுற்றும் வல்லவாழ்
மைந்தனார் என்றெண்ணிச் சொல்லுவார் -- பந்தமே
பேணுவாய்! அன்னைவாய் கிள்ளையாய் போந்தல்
நாணுவாய்! இன்பமது எய்து.


முந்துற ஆக்கை அதுநீங்கி  நின்ஏத்த
தந்துதவல் வேண்டுமே உன்அருள்! -- அந்தணர் 
மந்திரத் தாலிறைஞ்சும் மாலிருஞ் சோலையுள்
சுந்திரனார் நெஞ்சே வணங்கு!


பிரிவாற்றாது தலைவனை நாடிச் சென்ற தலைவியின் நிலையைக் குறித்து தாய் இரங்கிக் கூறிய பாசுரம் :



மூவரில் மூத்தவன்! தேவரில் நாயகன்!
பூவையர் ஆவியைகோ வித்துச் -- சுவைப்பவன்!
கோலிய தன்வரம் கூடுமோ எம்பெண்?
மாலிருஞ் சோலை பயின்று !


எங்கள் தனிமுதல்! எம்வாணாள்!  தேநுந்து
தொங்கல் தவழ்முடியான்! விண்ணவர் -- தங்கள்கோன்
மாட்டுயர்  ஈசர்க்கு தன்னுடம்பில் கூறுகொள் 
கோட்டியூர் எம்பிரான்எம் வான்!

-----------------------------------------------------------------------------------------------------

பத்தாம் பத்து =>

பல திவ்யதேசங்கள் :


ஒருநல் மணியை!பொன் முத்தினைத் தேனை!
பெறநல் அமுதை! அருளை! -- இரும்நாள்நாம்
காண்பது வேங்கடம் வெஃகாபோல்  வெள்ளறை
தண்காவில் ஒண்மாலாட் சி!


இராமனிடத்தில் தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டிக் கூத்தாடுதல் :


இரக்கம் அறியா இராவணன்,தம் அன்னைப்
புரத்திட்டு தாழ்பட்டான்! எங்களால் -- நேரும்
பிழையுண்டோ? வல்வில் இராமா!ஓ! அஞ்சினோம்!
ஏழைக் கிளகாய்!எம் கோ!


இராமனிடத்தில் தோல்வியுற்ற அரக்கர் அபயம் வேண்டிக் கூத்தாடுதல் :


ஏத்துகின்றோம் ராமா! எமைக்காக்க வேணுமென்று!
சீற்றமெம்மேல் தீரவே சேவகம் -- ஆற்றவந்தோம்!
கூடிநின் றாடி குழமணி தூரத்தைப் 
பாடிமன் றாடுகின்றோம் நன்று.


கண்ணனை முலை  உண்ண அழைத்தல் :


சந்தமலர்க் கோதை அசோதை நானுனை
வந்துசேமம் அம்மமுண்ணக் கூவினேன்! -- அந்தியம்
போதுவானின் தெய்வங்கள் காணவங்கு நில்லாதே
சாதுவனாய் போந்தாரா மே!


கண்ணனை கைகொட்டி விளையாடும்படி கூறுதல் :  


பூங்கோவல் பள்ளப் பொதுக்கோது வாய்பிளந்தாய்!
தூங்குறி வெண்ணை அளைகையாய் ! -- ஓங்கி
இருகையால் கொட்டாய்நீ  சப்பாணி! அப்பம்
தருவே!கொட் டாய்சப்பா ணி!


மற்றை அவதாரங்களின் மேன்மையோடு கிருழ்ணாவதாரத்தின் எளிமையை அனுபவித்த :


எங்கானும் ஈதொப்ப துண்டே? அளப்பிலா
எங்கோ இமயத்து உச்சியில் -- கங்கைக்
கரைமேல் மந்திரம் கற்றானோ வெண்ணை
முறையால் ஆப்புண்ணும் எய்து?


கண்ணன் செய்தமைக் குறித்து ஆய்ச்சியர் முறை இடுதல் : 

 மான முடையஎன் கன்னியை என்செய்கேன்?
யானே? அவள்விளை யாடுமிடம் -- தானே
குறுகி துகில்பற்றிக் கீறி படிறன்
படிறுசெய தாழ்வதிலே னே !


ஆய்ச்சி ஒருத்தி கண்ணனோடு ஊடுதல் :

காதில் கடிப்பும் ஒருசெண்டும் கைக்கிசைந்து
போதிற் கமலம் மிகநாறி -- ஏதுக்கிது
எல்லியம் போதென்னிது ? என்றாய்சி சாடலும்
சொல்லியம்ப  துக்கம் செலவு.


தலைவியின் ஆற்றாமைகுத் தாய் இரங்கித் தலைவனை வேண்டும் பாசுரம் :

புள்ளுவம் பேசிஎம் பெண்ணைஉன் கைவட்டாம்
உள்ளல் நலமோ? மணிநிறம் -- மெள்ளக்
கொணர்ந்து இவள்முன்னே வந்துபோகாய் மாதோ?
அணங்கிவள்சீர் மேவும் மிகுத்து.


தலைமகனைப் பிரிந்த தலைமகள் ஆற்றாது கூறிய பாசுரம் :


திருத்தாய் செம் போத்தே! கருமா முகில்போல்
ஒருத்தன் வரகாணல் அஃதும்  -- கரையாய்
காக்கைப் அம்பிள்ளாய்! பொன்னார் அடிகளை
நோக்கில் அறிகிலமாய்ப்  பாடு.

---------------------------------------------------------------------------------

பதினோறாம் பத்து =>


பிரிவாற்றாத தலைவி இரங்கிக் கூறும் பாசுரம்:


குன்றம் எடுத்தானும் கோயின்மை செய்துபுக்கு
இன்னும்ஏன் வாரானோ? தண்மதி -- என்னைத்
தபிக்கலும் காமனார் ஐங்கணைக்கு மாயும்என்
ஆவிக்கோர் ஈறும் இல.


தலைவி பிரிவற்றாது வருந்திக் கூறும் பாசுரம்: 

 குன்றம் எடுத்தமால்என் நெஞ்சம் நிறைகொண்டு
சென்றானாய், தூமலர் நீர்கொடு -- நன்றாக
நாம்தொழுதும் ஏத்தினால் காணக்  கொலோதான்?
காமனார் தாதை உலகு.


தலைவி அறத்தொடு நிற்று இரங்கிக் கூறும் பாசுரம் : 

மன்னிய மாலுக்கே என்எழில் தோற்றேனே !
என்னிவர்என் றெண்ணாதே பற்றினளாய்  -- என்மனத்தை
வைத்தோமே ! கூடல் குறிப்பதாகில் நெஞ்சே!மால்  
கைத்தா மரைக்குய் யுலகு!


அவதாரங்களின் மகிமை :

நிலையில்  உலகிதில் மீன்ஆமை கேழல்
வலியுடை ஓர்அரி குறள்என்றும் -- மேலை
சிலைகோல் இவையுடை ராம கிருட்டினனாய் 
ஞாலத்தே உம்பர் உலவு.


இரண்டு தோழியர் எம்பெருமானது சௌலப்யம், பரத்வம் இவை சொல்லி ஏத்துதல் : 
 
மானமரு மென்னோக்கி இன்துணையா காடுறைந்தான்
வானமரும் தேவனவன் காணேடீ! -- வானிலமர்
நாதனவன் வெள்ளத்தான் வேங்கடத்தான் உள்ளத்துப் 
போதமர்வான் சாழலே கொண்டு.


பிரளய காலத்தில் எம்பெருமான் உலகத்தாரை ரக்ஷித்த படி :


மைபோல் இருள்மிக்கு பாரெல்லாம் மூழ்கலா 
வெய்து நெடுங்கடலே ஆனகாலம் -- ஐயன்
வானவரும் யாமும் அகப்பட திருவயிற்றில்
போனகம் செய்தளிப்பர் தாம்! 


எம்பெருமான் திறத்தில் ஈடுபடாத அவயவங்கள் பயனற்றன என்று கூறுதல் : 


நீளாகம் திண்தோள் சுடர்முடி மாயோனைப்
பேணாப்  புலன்,புலனல்ல -- கண்டாமே !
மெய்நின்ற பாவம் முடிய மறவாது
செய்தவம்,மால் பாடியாடு வாம்! 


தேக சம்பந்தத்தை போக்கித்தற எம்பெருமானிடத்தில் ஆழ்வார் 
பிரார்த்த்திதல் : 
 

மாற்றம் உரைப்பதொன்று உண்டு, கதியிலன்பால்
சீற்றமெழ இன்னம் பிறந்தனாய் -- ஆற்றுமோ?
ஆழியாய்! நீஅருளாய் உன்அருளே! எங்கானும் 
ஊழ்வினை சாரா வகை!


உபோத்காதம் :

குலம்தரும்! கோதிலவா பக்திநெறி கூட்டி
செலுவதிரு  நாரணன் தாள்சேர் -- நலம்தரும்!
தோலாப் புகழ்தொண்டர் பொற்றாள் துணையுதும்
மேலாத் தரும்கலியன் பாட்டு !


அர்ச்சாவதாரத்தில் மண்டிக் கிடந்த ஆழ்வாருக்கு அபிநந்தனம் :


காரார் புயற்கைக் கலிகன்றி! வாரிமாறா 
கார்மன்னு நீள்வயல் மங்கையார்! -- கூர்கொள் 
வடிவு  நெடுவேல் வலவன்! இடவகை
நாடல் நமக்கு அழகு! 


திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
எம்பெருமானார், ஜீயர் திருவடிகளே சரணம்.
ஆசாரியன் திருவடிகளே சரணம்.


தாசரதி தாஸன் , 
கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன் அவர்கள் 

***மயர்வற மதிநலம் அருளப் பெற்ற திருமங்கை ஆழ்வார்  
சாதித்த பெரிய திருமொழி 108 பதிகங்களின் ***  
 

சுருக்கமாக   இயற்றின

'பெரிய திருமொழி பாசுர-திரட்டு'' 

முற்றுப் பெற்றது.

***சுபம்***